இவர் நமக்குப் பொருத்தமானவர் தான்!

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே  அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

"And among His wonders is this: He creates for you mates out of your own kind, so that you might incline towards them, and He engenders love and tenderness between you: in this, behold, there are messages indeed for people who think! "  (30:21)

இக்கட்டுரையில் மேற்கண்ட இறைவசனத்தில் இடம் பெற்றிருக்கும் "மவத்தத்" என்ற சொல்லை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

மவத்தத் என்பதற்கு தமிழில் "அன்பு", "உவப்பு", "நேசம்" என்று மொழிபெயர்த்திருக்கின்றார்கள்.

ஆங்கிலத்தில் மவத்தத் என்பதற்கு "Love" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மேலும் அகராதியில் "wadda" என்ற மூலச்சொல்லுக்கு

- to love, to like, be fond, to make friends, to show love or affection, to attract, to love each other, be on friendly terms etc.,

என்றெல்லாம் பொருள் தருகிறார்கள்.

wadud என்ற பெயர்ச்சொல்லுக்கு - favourably disposed, attached, devoted, fond, friendly என்றெல்லாம் பொருள் படுகிறது.

அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று தான் - அல் வதூத் - the Loving One என்பதுவும் இங்கே நினைவு கூறத் தக்கது.

சற்று ஆழமாக இச்சொல் தரும் கருத்தை நாம் ஆய்வோம்.

ஆணாகவும் பெண்ணாகவும் மனித இனத்தைப் படைத்த இறைவன் அவர்களுக்குள் இயல்பாகவே ஒரு ஈர்ப்புத் தன்மையை உண்டாக்கியிருக்கிறான்.

அந்த ஈர்ப்புத் தன்மை ஒரு ஆழமான நட்புக்கும், உறவுக்கும் வழி வகுக்கிறது. அந்த ஈர்ப்புத்தன்மை வெறும் உடலளவில் என்று மட்டும் இல்லாமல், இருவரின் அறிவிலும், இருவரின் இதயத்திலும், இருவரின் ஆன்மாக்களிலும் - ஒரு நெருக்கத்தை, ஒரு நட்பை, ஒரு காதலை உண்டாக்கி விடுகிறது. அந்த இருவரும் நீண்ட கால நண்பர்களாக ஆகி விடுகிறார்கள். இந்த நீண்ட கால உறவுக்கு (long term relationship) வழி வகை செய்வதே திருமணம்,

இங்கே ஒரு நபிமொழியை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

Imaam al-Bukhaari (may Allaah have mercy on him) reported in his Saheeh that ‘Aa’ishah (may Allaah be pleased with her) said: “I heard the Prophet (peace and blessings of Allaah be upon him) saying: ‘Souls are like conscripted soldiers; those whom they recognize, they get along with, and those whom they do not recognize, they will not get along with.’” (Saheeh al-Bukhaari).

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: " ஆன்மாக்கள் என்பவை பணிக்கு அமர்த்தப்பட்ட படை வீரர்களைப் போல. அவர்களில் யாரெல்லாம் ஒருவரை ஒருவர் இலகுவாக புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் மிக இலகுவாக நண்பர்களாகி விடுகிறார்கள்; அவர்களில் யாரெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் போல் தெரிகிறாகளோ, அவர்கள் விலகிப்போய் விடுகின்றார்கள்." (புகாரி, முஸ்லிம்)

இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில், நம்மில் சிலர், நம்மை ஒத்த சிலருடன் பழகுவதும், நண்பர்களாகி விடுவதும், வேறு சிலரிடமிருந்து நாம் விலகி விடுவதும் இவையெல்லாம் - வல்லோன் இறைவனின் இயல்பான படைப்பின் இரகசியங்களில் உள்ளவையாகும்.

இது திருமண உறவில் இணையும் ஆண்-பெண்ணுக்கும் பொருந்தும் தானே! அதனால் தானோ என்னவோ அண்ணல் நபியவர்கள் நீங்கள் திருமணம் முடிக்க விரும்பும் பெண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நம்மை அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.

மாஷா அல்லாஹ்!

இவ்வாறு ஒருவரை ஒருவர் இலகுவாகப் புரிந்து கொண்டு, "இவர் நமக்குப் பொருத்தமானவர் தான்" என்று ஒருவர்   முடிவுக்கு வந்து திருமணம் முடித்தலே சிறப்பான திருமண உறவுக்கு வழி வகுக்கும். அங்கு தான் அன்பு, நட்பு, காதல், ஈர்ப்பு, நேசம், நீண்ட கால உறவு - எல்லாம் மிக இயல்பாகவே நடந்தேறிவிடும்.

இதற்கு நபியவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் நடைபெற்ற திருமணமே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஆனால் நமது நிலை என்ன? நமது திருமணங்கள் எல்லாம் எப்படி நிச்சயிக்கப்படுகின்றன? பொன்னும், பொருளும் தானே நமது அளவுகோள்கள்?

இயல்பான ஈர்ப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பே அளிக்கப்படாமல் நடக்கும் நம்முடைய திருமண வாழ்க்கையில் அன்பையும், காதலையும் எதிர்பார்க்க முடியுமா? இன்றைய பெரும்பாலான கணவன் மனைவியர் "பெயருக்குத் தான்" இல்லற வாழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

புதிய தலைமுறை பாடம் படித்துக் கொள்ளுமா?

இந்தக் காதல் (மவத்தத்) பற்றி நாம் நிறைய ஆய்வு செய்திட வேண்டியுள்ளது.

இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.

Comments