நீடூர்-நெய்வாசல் ஒரு நாள் பயிற்சி முகாம் - கருத்துகள்

“உனக்குள் ஒரு சுரங்கம்” – ஒரு நாள் பயிற்சி முகாம்.

நாள்: 28-05-2011 சனி (காலை 9.30-மாலை 4.00)

இடம்:  J. M. H. நிகாஹ் மஹால்,  நீடூர்-நெய்வாசல்

பயிற்சியாளர்: கவுன்சலர் மன்சூர்

பயிலரங்கத்தின் தலைப்பு: மனித வள மேம்பாடு

நிகழ்ச்சி ஏற்பாடு : மயிலாடுதுறை வட்டார ஜமா அத் கூட்டமைப்பு

                                                                     ***

கலந்து கொண்ட மாணவ மாணவியர்களின் கருத்துக்கள்:

“இந்த நிகழ்ச்சி எனது சுய தகுதியை மேம்படுத்த உதவியாக இருக்கிறது. எனது தனித்துவத்தை எனக்கு எடுத்துரைக்கிறது”. – S.A. முஹம்மது இம்ரான்


“இந்த வகுப்பு மனிதன் இவ்வுலகில் எதற்காக பிறந்திருக்கின்றோம் என்பதை தெளிவு படுத்துகிறது”. S. நவாசுதீன்

“முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் இந்த விஷயம் போய் சேர வேண்டும்.” – S. ஹாஜா நஜ்புதீன்

“இந்த பயிற்சி வகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – கருத்துக்களை தெளிவாகவும், நடைமுறை உதாரணங்களுடன் எடுத்துக் கூறியது.” – A. பைஸுல் முஹம்மது

“இந்த பயிற்சி வகுப்பில் நான் யார் என்பதை எனக்குள் நான் ஆராய்வதற்கு ஒரு நல்ல ஊக்கமாக இருந்தது.” – S. V. முஹம்மது வலீத்

Comments