சீர்காழி - கோயில்பத்து ஒரு நாள் பயிற்சி முகாம் - கருத்துகள்

"உனக்குள் ஒரு சுரங்கம்" - ஒரு நாள் பயிற்சி முகாம்!

நாள்: 12-05-2011 வியாழன் (காலை 9.30-மாலை 4.30)

இடம்: ஜாமிஆ மஸ்ஜித்-மத்ரஸா, கோயில் பத்து - ஐவேலி,  சீர்காழி

பயிற்சியாளர்: கவுன்சலர் மன்சூர்

நிகழ்ச்சி ஏற்பாடு : மயிலாடுதுறை வட்டார ஜமா அத் கூட்டமைப்பு

                                                                  ***

கலந்து கொண்டவர்களின் கருத்துக்கள்:

"இப்பயிற்சி கட்டாயமாக எல்லா சமூக மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்." - S. ஹாஜா நஜ்புத்தீன்


"இப்பயிற்சி முகாம் ஒரு சிறந்த அறிவுக் களஞ்சியம்". A. நஜீர் அஹ்மது

" இது மாணவர்கள் வாழ்க்கைக்காக நல் வழி காட்டும் நிகழ்ச்சி. மாணவர்களின் தன்மையை உணர வைக்கும் நிகழ்ச்சி." N. நவ்சாத் அலி

"இந்தப் பயிற்சி ஒரு மாணவனின் திறமையை வெளிப் படுத்த உதவியாக இருந்தது." T. முஹம்மது ஆசிக்

"இது எங்கள் அறிவு, திறமை, தன்னம்பிக்கையை வளர்த்துள்ளது." S. இர்ஷாத் அகமது

"இப்பயிற்சி வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான வகுப்பு. இவ்வகுப்பின் மூலம் எங்களை நாங்கள் தெரிந்து கொண்டோம். கதைகள் எங்களது மனநிலையை புறட்டிப் போட்டு விட்டது." - A. உமர் யூசுப்

" நான் ஒரு முஸ்லிம் அல்லாதவன். இருப்பினும் எனக்கு இந்த வகுப்பில் கலந்து கொள்ள ஓர் வாய்ப்பு கிடைத்தது அந்த இறைவன் நாடியதால் தான். எனக்கு இது மார்க்கம் அல்லாமல் இருந்தாலும் இவர் கூறிய அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்." - R. தினேஷ் குமார்

"என்னுடைய திறமையை வெளிக் கொண்டு வந்து எப்படி செயல் படுவது என்று இந்த பயிற்சி வகுப்பு உதவுகிறது." - M. முஹம்மது தவ்பீக்

"இந்தப் பயிற்சி எல்லா ஊர்களிலும் நமது மாணவர்களுக்கு கண்டிப்பாக நடத்தப் பட வேண்டும்." - P. சவுக்கத் அலி

"இந்த பயிற்சி வகுப்புகள் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு, எங்களை நாங்களே புரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. - M. ஹிமானா பர்வின்

Comments