மனம் போன போக்கிலே போக வேண்டாம்!

மனத்தூண்டலைக் கட்டுப் படுத்துவது எப்படி?

மனத் தூண்டலைக் கட்டுப் படுத்திட வல்ல இறைவன் கற்றுத் தந்துள்ள வழிகள்:


1. இறைவனை சந்திப்போம் எனும் அச்சம்:


“எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.(79: 40 – 41)

தாலூத்தின் அணியில் இடம் பெற்றிருந்த – மனக் கட்டுப்பாடு மிக்கவர்களை அல்லாஹ், “நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர்” என்றே குறிப்பிடுகின்றான்.


மன இச்சைகளைத் தகர்த்து விடக் கூடிய ஒன்றை அதிகமாக நினைவு கூறுங்கள் – அது தான் “மரணம்”. (முஸ்லிம்)

2. ஐந்து வேளைத் தொழுகை:

ஐந்து வேளை அனுதினமும் தொழுது வந்தால் – மனோ இச்சையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் மனக் கட்டுப்பாடு இல்லாதவர்களால் ஐவேளைத் தொழுகையை சரி வர நிறைவேற்றிட இயலாது.

மனோ இச்சையைப் பின் பற்றுபவர்கள் தொழுகையை வீணாக்கி விடுபவர்கள் என்றும் திருமறை எச்சரிக்கை விடுக்கின்றது.

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.(19: 59)

3. இரவில் எழுந்து தொழுதல்:

நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது. (73: 6)

மேற்கண்ட இறை வசனத்தில் – அரபி மொழியில் “வத்-அன்” என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இச்சொல்லுக்கு, “to make smooth and soft, to force down, to tread under foot, to trample down – என்றெல்லாம் மொழி பெயர்க்கப் படுகின்றது.

ஆம். இரவுத் தொழுகைக்கு நம் மனத்தை மென்மையாக மாற்றிடும் வலிமை உள்ளது.

4. நோன்பு:

ரமலான் மாதம் பகல் முழுவதும் ஹலாலான உணவை உண்ணாமல், பருகாமல் – அதனை ஒத்திப் போட்டிடும் பயிற்சி, நிச்சயமாக மனக் கட்டுப் பாட்டை வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Comments