அன்னை பாத்திமா (ரலி) வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?

சுன்னத்தான இல்லறம்:

அன்னை பாத்திமா (ரலி) வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?

பாத்திமா (ரலி) அவர்கள் எப்பொழுதும் பொறுமையுடையவராகவும், படைத்தவனுக்கு நன்றியுடைய நல்லடியாராகவும் வாழ்ந்து காட்டினார்கள். எத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலும் கூட எந்த முனுமுனுப்பும் காட்டாதவர்களாக இருந்தார்கள். இந்த உலகமும், அதன் அலங்காரங்களும் எந்த வகையிலும் அவரது வாழ்வை திசை மாற்றிடவில்லை.


ஒரு தடவை – அலீ அவர்கள் மனைவி பாத்திமா அவர்களைப் பார்த்து, “ஏன் பாத்திமா? உன் முகமெல்லாம் மஞ்சனித்து இருக்கின்றது? -என்று கேட்டார்களாம்.

“நான் சாப்பிட்டு மூன்று நாட்களாகி விட்டன!” – என்றார்கள் அன்னை பாத்திமா அவர்கள்.

“ஏன், என்னிடம் இதனைச் சொல்லவில்லை? நான் ஏதாவது உணவுக்கு ஏற்பாடு செய்திருப்பேனே!”

“அலீ அவர்களே! நீங்கள் கேட்டதனால் சொல்கிறேன்; நம் திருமணத்தின் போது – என் தந்தை எனக்கு உபதேசம் ஒன்றைச் செய்திருந்தார்கள். அது என்ன தெரியுமா? “பாத்திமா! அலீயிடம் எதனையும் கேட்காதே! கொடுத்தால் மட்டும் வாங்கிக் கொள்!” – என்பது தான் அந்த உபதேசம்!

இதுவே சுன்னத்தான இல்லறத்தின் மிக முக்கியமானதொரு இலக்கணம்!

Comments