திருமண வாழ்வில் எனக்கு நம்பிக்கை இல்லை! சொல்வது யார்?

சுன்னத்தான இல்லறம்: 

28 வயது முஸ்லிம் இளைஞன் ஒருவன். பொறியியல் இளங்கலைப் படிப்பு படித்து முடித்து விட்டு முதுகலைப் படிப்புச் செலவுக்காக பகுதி நேர வேலை ஒன்றில் வேலை பார்ப்பவன். அவன் தன்னோடு பணியாற்றும் இன்னொரு முஸ்லிம் சக ஊழியரிடம் பின் வருமாறு பேசிக் கொண்டதாக வலைதளம் ஒன்று செய்தி தருகிறது:



“திருமணம் செய்து கொண்டு தான் குடும்பம் நடத்திட வேண்டும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை!

“he told that he did not believe in the institution of marriage".

"ஏனெனில் என்னுடைய உறவினர்களில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துபவர்கள் யாருமே மகிழ்ச்சியாகவே இல்லை! (were very unhappy!). கணவன் மனைவியருக்குள் அன்பு (love) இல்லை; நம்பிக்கை (trust) இல்லை; மதிப்பு-மரியாதை (respect) இல்லை; அவர்களைப் போல் திருமணம் செய்து கொண்டு நானும் ஏன் சோகத்தை விலைக்கு வாங்கிட வேண்டும்! தேவையே இல்லை இந்தத் திருமணம்!"

இப்படிப்பட்ட முஸ்லிம் இளைஞனுக்கு நாம் “ஆலோசனை” சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்!

நமது பெற்றோர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம் இது:

இவ்வாறு - திருமண வாழ்வில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லும் இளைஞன் ஒரு வேளை நமது மகனாக இருந்து விட்டால்? அல்லது நமது மகள் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டால்?

பெற்றோர்களே! – நமது இல்லறத்தில் எல்லாம் இருக்கின்றது! ஒன்றைத் தவிர!!

அது என்ன? அது தான் மென்மை!

பெற்றோர்களின் திருமண வாழ்வில் மென்மை என்பது பற்றாக்குறையாகிப் போனதால் தான் - இது போன்ற இளைஞர்கள் இப்படிப்பட்ட தவறான ஒரு முடிவின் பக்கம் தள்ளப் பட்டிருக்கின்றார்கள்!

எனவே – அடுத்து வருவது – “மனைவியிடம் மென்மை!”

இன்ஷா அல்லாஹ்!

Comments