பொருத்தம் பார்த்து மணந்து கொண்டால் - இங்கேயும் சொர்க்கம் தான்!

சுன்னத்தான இல்லறம்: 

பொருத்தம் பார்த்து மணந்து கொண்டால் - இங்கேயும் சொர்க்கம் தான்!

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி; அப்பெண்களைக் கன்னிகளாகவும்; பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (56:35-38)


சூரத்துல் வாகியாவின் 37 - ஆம் வசனத்தில் வரும் ஒரு சொல் தான்: "அத்ராப்"

அத்ராப் என்பதற்கு - "சம வயதினர்" என்று பொருள். அதே வேளையில் மேலதிக விளக்கம் ஒன்றைத் தருகிறார்கள் திருமறை விரிவுரையாளர் முஹம்மத் அஸத் அவர்கள்:

Muhammad Asad: “As regards the term atrab, it primarily denotes "[persons] of equal age“; however, as pointed out by all philological authorities, this term is also used in the sense of "[persons] equal in quality that is, "well-matched":

முஹம்மத் அஸத் அவர்கள்: "அத்ராப் என்ற சொல் முதன்மையாக சம வயதுடையவர்களையே குறிக்கும் சொல்லாகும்; எனினும் எல்லா மொழியியல் வல்லுனர்களும் சுட்டிக் காட்டுவது போல் - இந்தச் சொல் ஒரே விதமான பண்புடையவர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படும். அதாவது - மிகச் சிறப்பான பொருத்தம் உடையவர்களையும் (well matched) இச்சொல் குறிக்கும் என்பதாம்."

அதாவது நாளை மறுமையில் - இறைவனின் நாட்டப்படி நீங்கள் வலப்புறத்தார்களில் ஒருவராக இருந்தால் - உங்களுக்கு மட்டுமே பொருத்தமான, உங்கள் மீது பாசம் உள்ள, புத்தம் புதிய ஒரு கன்னிப் பெண்ணை வல்லோன் உங்களுக்கென்றே படைத்துத் தருகிறான் என்பது தான் இதன் விளக்கம்!

சந்தோஷம் தானே!

இதிலிருந்து நாம் இன்னொரு கருத்தையும் எடுக்கலாம்:

அதாவது - உங்களுக்கு முற்றிலும் பொருத்தமான ஒரு பெண்ணை (made for each other) நீங்கள் திருமணம் முடித்தீர்கள் என்றால் - இவ்வுலக வாழ்க்கையே உங்களுக்குச் சொர்க்கம் தான்!! சரிதானே?

Couples who are compatible live a Heavenly life in this world!

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் பின் வரும் கூற்றை சற்றே சிந்தித்துப் பாருங்கள். மேலும் உங்களுக்கு அது விளங்கும்!

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் சொல்கிறார்கள்: நிச்சயமாக இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கம் இருக்கின்றது; யாரெல்லாம் இந்தப் பூவுலக சுவர்க்கத்தில் நுழைந்திடவில்லையோ, அவர்கள் மறு உலக சுவர்க்கத்திலும் நுழைந்திட மாட்டார்கள்!

And Imam Ibn Taymiyyaah said, "Indeed, there is a paradise here on earth and whoever does not enter it here, will not enter the Paradise of the hereafter."

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? அவள் தான்- நல்லதொரு மனைவியாவாள். (அறிவிப்பவர்: உமர் (ரலீ); நூல்: அபூதாவூத் 1412)

உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி. (ஸஹீஹ் முஸ்லிம்)

Comments