பிரிவும் ஏக்கமும்

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிகாலம்,

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் வழக்கம் போல் மக்களின் நிலைமைகளை அறிய இரவில் உலா வருகிறார்கள். அப்போது ஒரு பெண்மணி வீட்டுக்குள்ளிருந்து சோகமான ஒரு பாடலைப் பாடுகிறாள்.


தன் கவலையையும், மன ஆதங்கத்தையும் “என் நேசர் (கணவர்) என் அருகே இல்லாத இரவுதான் எவ்வளவு நீளமானது?” என கவிதை மூலம் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

அருகே சென்ற உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் அழுததற்கான காரணம் கேட்டார்கள்.

வந்தவர் உமர் (ரலி) தான் என்று தெரியாத அப்பெண்மணி ‘எங்கள் தனிமையை கொஞ்சம் இலகுவாக்கூடாதா; நீண்ட நாட்கள் எங்கள்
கணவன்மார்கள் பிரிந்திருப்பதை சற்று குறைக்கக்கூடாதா இந்த ஆட்சியாளர் உமர் (ரலி) என்று கூறினார்கள்.

மறுநாள் காலை நபியவர்களின் துணைவியாரும், உமர் (ரலி) அவர்களின் மகளுமான அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்று, ஒருபெண் தன் கணவனை விட்டுப்பிரிந்து எத்தனை நாள் பொறுமையாக இருக்க முடியும் என்று கேட்டார்கள்.

அன்னை ஹஃப்ஸா (ரலி) ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம் கூடிபோனால் நான்கு மாதம் பொறுமை காக்க இயலும் என்று பதில் கூறினார்கள்.

உடனே "இறைப்பாதையில் போர்புரிய களம் புகும் வீரன் தன் மனைவியைப் பிரிந்து நான்கு மாதங்களுக்குமேல் யுத்த களத்தில் தங்கியிருக்கக் கூடாது" என கலீஃபா உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அதனுடைய முதல் நகலை அந்தப் பென்மணியின் கணவனுக்கு அனுப்பிவைத்தார்கள்.

நூல்: குலஃபாவுர்ரசூல் (ஸல்) பக்கம்: 155

Comments