தரமும் வேண்டும்! அதில் நிரந்தரமும் வேண்டும்!

தக்வா குறித்த அடுத்த கட்டுரை இது:

நாம் இங்கே எடுத்துக் கொள்ளும் இறை வசனம் இது:

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள். (3:102)

இம்மொழி பெயர்ப்பு "தமிழில் குர்ஆன்" மொழிபெயர்ப்பு ஆகும்.

இறைவன் நம் மீது வைத்திருக்கும் அன்பு, பாசம், இரக்கம் - இவை எல்லாவற்றையும் நினைவில் இருத்தி அவனது உள்ளமையை இதயத்தால் ஆழமாக உணர்கின்ற நிலையையே - தக்வா - என்ற சொல் குறிக்கின்றது என்பதை முன்னரே விளக்கியுள்ளோம்.


மேலும் - அளவு கடந்த மதிப்பு, மரியாதை, வியப்பு மற்றும் மகத்துவம்  ஆகிய இவ்வனைத்துக்கும் உரித்தான நம் இறைவனின் உள்ளமையை இதயத்தால் உணர்கின்ற நிலைக்குப் பெயர் தான் தக்வா என்பதாகும் என்றும் பார்த்தோம்.

இப்போது தக்வா எனும் உணர்வு குறித்து மேலும் இரண்டு விஷயங்கள்:

ஒன்று:

"நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்!"

அதாவது இறைவனை இதயத்தால் உணர்ந்து கொள்ள வேண்டிய முறைப்படி உணர்ந்து கொள்ளுங்கள் என்று இதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

இது எதனை உணர்த்துகிறது எனில் - இந்த இறை உணர்வை வளர்த்துக் கொண்டு முன்னேறுவதில் பல படிகள் (steps)  இருக்கின்றன என்பதைத் தான்!

ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் - "there are steps in developing one's taqwa"

இது எதனை உணர்த்துகிறது என்றால் - இறை உணர்வை வளர்த்துக்கொள்ள நமக்கு "முயற்சி" ஒன்று தேவைப்படுகிறது!

We need to work on it!

இதற்கென நாம் எந்த வித முயற்சியும் செய்திடாவிட்டால் நமது தக்வா "நுனிப்புல்" தக்வா எனும் நிலையில், ஒரு ஓரத்தில் நாம் நின்று விடுவோம்.

அதாவது - "we will stop with the periphery of our taqwa!"

சுருக்கமாகச் சொல்வதானால் - தக்வாவுக்குத் "தரம்"என்று ஒன்று உண்டு என்பதைத் தான் இறைவசனத்தின் இப்பகுதி உணர்த்துகிறது! நமது தக்வாவின் தரத்தை நாம் தான் உயர்த்திக் கொள்ள முயற்சி செய்திட வேண்டும்!

இரண்டு:

"மேலும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்!"

இதற்கு என்ன பொருள்?

தக்வாவின் தரத்தை உயர்த்திக் கொள்வது  நமது ஒரு முயற்சி எனில் (To make it deep is one effort)

தக்வாவின் தரத்தை "நிரந்தரமாக ஆக்கிக் கொள்வது" இன்னொரு முயற்சியாகும் என்பதையே இவ்வசனத்தின் இறுதிப் பகுதி விளக்குகிறது! (To make it permanent is another effort)

அப்படியானால் என்ன பொருள்?

நமது தக்வா என்பது "பலவீனமான" ஒன்றாகும். Our taqwa is fragile!

நான் தக்வாவின் உயர்ந்த நிலைக்குச் சென்று விட்டேன் என்று யாரும் மார்தட்டிக் கொண்டு விட முடியாது! நம்மை அறியாமலேயே கீழே சறுக்கி விழுந்து விடுவோம்!

எனவே நாம் செய்திட வேண்டியது என்னவெனில் - ஒரு எச்சரிக்கை உணர்வோடு நமது "இதயபூர்வமான இறை உணர்வை" வளர்த்துக் கொள்ள தொடர்படியான முயற்சி ஒன்றில் இருந்து கொண்டே இருந்திட வேண்டும். அதாவது தரமும் வேண்டும்; அதில் நிரந்தரமும் வேண்டும்.

இதனையே ஒரு இஸ்லாமிய அறிஞர் இவ்வாறு விளக்குகிறார்:

"We have to be cautious always to make efforts on a continuous basis to keep this double dimension of our taqwa – that is quality and permanency!"  

இங்கே வியப்பின் உச்சத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் விஷயம் என்னவென்றால் - இப்படிப்பட்ட தரத்தினை உயர்த்திக் கொள்வதில் தான் நமது சமூகத்தின் ஒற்றுமை அடங்கியிருக்கின்றது என்பது தான்!

அடுத்து வரும் இறை வசனம் இதனையே உணர்த்துகிறது!!!

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.(3:103)

ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை என்றொரு விடுகதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தென்னை மரம் என்று விடை சொல்வார்கள்.

எதற்கு இந்த விடுகதை சொல்கிறேன் என்று புரிகிறதா?

Comments