எனது நூல்: இஸ்லாமிய உளவியல்




பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

குறிப்பு: இஸ்லாமிய உளவியல் குறித்த எனது கட்டுரைகளை இங்கே தொகுத்து வருகின்றேன். அவ்வப்போது இப்பதிவு மாற்றத்துக்குள்ளாகலாம்! 

கட்டுரை 1:

1 ஹவா - மனோ இச்சை 

(ஹவா - எனும் திருமறையின் கருத்தாக்கம்)

ஹவா என்ற சொல்லின் அகராதிப் பொருட்கள்:

Hawaa – To drop; fall; tumble; fall down; sink; to topple; to swoop down; to pounce; to blow wind; to embrace; to degrade someone; to love; become fond; to air; to ventilate; expose to the wind; to fan the air; complaisant; to flatter; to lean; to reach; grab; grasp; to strive; aspire; to seduce; to be thrust down; to attract; tempt; to lure; fascinate; enrapture; carry away; affection; passion;

**

இந்தச் சொல் மொத்தம் திருமறையில் அதன் கிளைச் சொற்களுடன் சேர்த்து 38 தடவைகள் இடம் பெற்றுள்ளன. சற்று ஆழமாக இச்சொல்லைப் புரிந்து கொள்வோம்:

ஹவா எனும் மனோ இச்சை ஒரு மனிதனைக் "கீழே" (to drop; to fall down; to be thrust down; ) தள்ளி விட்டு விடும். காற்றடித்துச் சென்று ஒரு பொருளை மிக தொலைவில் கொண்டு போய் போட்டு விட்டு விடுவது போல (expose to the wind; to fan the air; carry away), அவன் மனிதத் தன்மையிலிருந்து தூரப்படுத்தப்பட்டு விடுகிறான்.

திருமறை வசனங்களுக்குச் செல்வோம். ஹவா எனும் கருத்தாக்கம், திருமறையின் - வேறு என்னென்ன கருத்துகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் பார்ப்போம்.

ஹவா எனும் கருத்தை - ஈமானுக்கு எதிராக, ஹிதாயத் எனும் நேர்வழிக்கெதிராக, ஷரீஅத்துக்கு எதிராக, அறிவுக்கு எதிராக, நீதிக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்துகிறது திருமறை!

**

1) ஹவா என்பது அடிப்படையிலேயே - ஷிர்க் எனும்  இணை வைத்தலுக்கு வித்திட்டு விடுகிறது!

தன் மனோ இச்சையைப் பின்பற்றி நடப்பவனுக்கு, அவனது மனோ இச்சையே "தெய்வமாக" ஆகி விடுகிறது என்று எச்சரிக்கிறான் இறைவன்.

25:43
-------
தன் இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? அவனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா? (25:43)

**

2) மனோ இச்சையைப் பின்பற்றுபவன் நேர்வழியைத் தவற விட்டு விடுகிறான்!

45:23
--------

எவன் தன்னுடைய இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (45:23)

இதயத்துக்கு முத்திரை வைத்து விட்டால் - அறிவைக் கொண்டு சிந்தித்தல் சாத்தியமே இல்லை

28:50
-------
உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான். (28:50)


**

3) மனோ இச்சையையும் ஷைத்தானையும் இணைத்துச் சொல்கிறது இன்னொரு வசனம்:

6:71
-----
"ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.” (6:71 - ஒரு பகுதி மட்டும்)

இவ்வசனத்தில் இடம் பெறும் "இஸ்தஹ்வதுஹுஷ் - ஷயாதீனு" - என்ற சொற்றொடரை சற்றே கவனிக்க. முஹம்மத் அஸத் இவ்வாறு இதனை மொழிபெயர்க்கிறார்:

"Satans have enticed into blundering after earthly lusts"

4) மனோ இச்சை என்பது ஷரீஅத்துக்கு எதிரானது!

45:18
-------
 இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
(45:18)

**

5) மனோ இச்சை என்பது நீதி நியாயத்துக்கு எதிரானது!

4:135
-------
"எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்!" (4:135 - ஒரு பகுதி மட்டும்)

38:26
-------

"ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்!" (38:26 - ஒரு பகுதி மட்டும்)

**

6) மனோ இச்சையும் ஆணவமும் இணைக்கப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்:

2:87
-----
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள். (2:87)

**

7) மறுமை நம்பிக்கை இல்லையேல் - மனோ இச்சையில் வீழ்ந்து விடுவோம்!

20: 15-16
------------
“ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன். “ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.

**

8) மனோ இச்சையைப் பின்பற்றுபவனிடம் நிலையான மன உறுதி இருக்காது!

42:15
-------
எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; (42:15 - ஒரு பகுதி மட்டும்)

9) ஹவாவும் நாயும்!

7:176
-------
நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக. (7:176)

**

10)  மனோ இச்சை உடையவனுக்குத் தீமையெல்லாம் அழகு தான்!

47:14
-------
எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா?

பாடங்கள்:
-------------

மனோ இச்சையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்:

ஈமான் எனும் இறை நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளல்

உள்ளச்சத்துடன் தொழுதல்

குர்ஆனைத் தொடர்ந்து ஓதுதல்

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு சப்ர் எனும் பொறுமையைக் கடைபிடித்தல்

நல்ல மனிதர்களுடன் சேர்ந்திருத்தல் / தீய மனிதர்களிடமிருந்து விலகி இருத்தல்

தீமை நடக்கும் இடங்களைத் தவிர்த்துக் கொள்தல்

வலை தளங்களில் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்தல்

கண் பார்வையைத் தாழ்த்திக் கொள்தல்

பள்ளிவாசல் தொடர்பை அதிகரித்துக் கொள்தல்

மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுதல்

தனக்கென்று வாழ்வில் ஒரு இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு அதற்காகவே தன் முழு கவனத்தையும் செலுத்துதல்

@@@

Comments