சிந்திக்க மறுக்கின்ற
தொழுகையாளிகளைக்
கெடுப்பதெல்லாம்...
ஷைத்தானுக்கு
மிகச் சுலபம்!
***
ஷரீஅத் என்பது
சமூக நீதியை
அடிப்படையாகக் கொண்டது!
எங்கு நீதி இல்லையோ
அங்கு ஷரீஅத் இல்லை!
***
மனித உரிமை மீறல்களுக்கெல்லாம்
மன்னிப்பே கிடையாது
இறைவனிடத்தில்!
***
இடைவெளிகள் எதற்காக?
சிந்திப்பதற்கா?
மறப்பதற்கா?
மறக்க வேண்டியதையெல்லாம்
சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.
சிந்திக்க வேண்டியதையெல்லாம்
மறந்து விடுகிறோம்!
இடைவெளிகள் எதற்காக?
சிந்திப்பதற்கா?
மறப்பதற்கா?
Comments
Post a Comment