முக நூல் பதிவுகள் - செப்டம்பர் - 2021



சிந்திக்க மறுக்கின்ற

தொழுகையாளிகளைக்

கெடுப்பதெல்லாம்... 

ஷைத்தானுக்கு 

மிகச் சுலபம்!


***


ஷரீஅத் என்பது

சமூக நீதியை 

அடிப்படையாகக் கொண்டது!

எங்கு நீதி இல்லையோ 

அங்கு ஷரீஅத் இல்லை!


***


மனித உரிமை மீறல்களுக்கெல்லாம் 

மன்னிப்பே கிடையாது

இறைவனிடத்தில்!


***


இடைவெளிகள் எதற்காக? 

சிந்திப்பதற்கா? 

மறப்பதற்கா? 

மறக்க வேண்டியதையெல்லாம் 

சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். 

சிந்திக்க வேண்டியதையெல்லாம்

மறந்து விடுகிறோம்! 

இடைவெளிகள் எதற்காக? 

சிந்திப்பதற்கா? 

மறப்பதற்கா?

Comments